நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; இந்திய தொழில் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது: டத்தோ அப்துல் ஹமித்

கோலாலம்பூர்:

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பொறுப்பேற்றுள்ளது இந்திய தொழில் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது.

மிக்கோய்ன் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வேளையில் மிம்கோய்ன், ஏஹ்சான் வர்த்தக குழுமத்தின் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என்ற மனக்குறை நீண்ட நாளாக இருந்து வந்தது.

இதற்கும் தற்போது தீர்வுக் காணப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்திய சமுதாயத்தின் குரலாக அமைச்சரவையில் ஒலிப்பார்.

அதே வேளையில் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கும் அவர் குரல் ஒலிக்கும் என மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சபையான மிம்கோய்ன் மேலும் நம்புகிறது என்று அவர் கூறினார்.

டத்தோஸ்ரீ ரமணனின் இந்த நியமனம் இந்திய தொழில் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது.

அந்நியத் தொழிலாளர்கள் உட்பட பல பிரச்சினைகளை இந்திய தொழில் துறைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அதற்கு எல்லாம் டத்தோஸ்ரீ ரமணன் தீர்வு காண்பார் என தாம் நம்புவதாக டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset