செய்திகள் மலேசியா
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே: டத்தோ லோகபாலா
ஈப்போ:
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியில் உறுப்பியம் பெற்ற கட்சியாக உள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் திட்டவட்டமாக கூறினார்.
அக் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணத்தால்தான் தேசிய முன்னணியில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதற்காக பிபிபி கட்சி தேசிய முன்னணியில் இல்லை என்று பொருள்படாது. தற்பொழுது பிபிபி கட்சியில் எந்த உட்பூசல் இல்லை. களையெடுக்கப்பட வேண்டியவர்களை அப்புறப்படுத்திவிட்டோம்.
மேலும் 320,000 உறுப்பினர்களைக்கொண்டு சிறப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் பிபிபி கட்சி விரைவில் தேசிய முன்னணியில் மீண்டும் இணைந்து செயல்படும்.
இன்னும் ஒரிரு மாதங்களில் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி அதற்கான அறிவிப்யை செய்வார் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
ஈப்போவில் பிபிபி கட்சியின் மாநில அலுவலகத்தை திறந்து வைத்தப் பின்னர் டத்தோ லோகபாலா இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கட்சியில் மேலும் அதிகமான உறுப்பினர்கள் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேராவில் மாநில பிபிபி அலுவலகம் திறக்கட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் அதிக சேவை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 12:21 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
இன்று தலைநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வள்ளுவர் மறை வைரமுத்து உரை
December 17, 2025, 7:06 am
