செய்திகள் மலேசியா
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
கோலாலம்பூர்:
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தார்.
இப்புதிய அமைச்சரவையில் 7 பேர் அமைச்சர்களாகவும் 8 துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
மடானி அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, மொத்தம் ஏழு அமைச்சர்களும் எட்டு துணை அமைச்சர்களும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நியமன ஆவணங்களை வழங்கும் விழா, பதவிப் பிரமாணம் ஆகியவை இன்று காலை இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்றது.
இதில் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று மனிதவள அமைச்சராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பணியை தொடங்கவுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 1:49 pm
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே: டத்தோ லோகபாலா
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
இன்று தலைநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வள்ளுவர் மறை வைரமுத்து உரை
December 17, 2025, 7:06 am
