செய்திகள் மலேசியா
வியாழன் நள்ளிரவு வரை கடும் மழை: மெட் மலேசியா எச்சரிக்கை
கோலாலம்பூர்:
திரெங்கானு, பகாங், ஜோகூர் பகுதிகளில் இன்று முதல் வியாழன் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரெங்கானு, ஜெரான்ட், மாறன், குவாந்தன், பெக்கான், பஹாங்கில் ரோம்பின், ஜோகூரில் உள்ள செகாமட், குளுவாங், மெர்சிங், கோத்த திங்கி ஆகிய இடங்களில் கடுமையான மழை எச்சரிக்கை விடப்பட்டதாக மெட்மலேசியாவின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முஹம்மத் ஹிஷாம் முஹம்மத் அனிப் தெரிவித்தார்.
மேலும், தொடர்ச்சியான மழை எச்சரிக்கை கிளந்தான் மாநிலம் முழுவதும் விடப்பட்டுள்ளது.
பஹாங்கில், இந்த எச்சரிக்கை கேமரூன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ், ராப், பென்டாங், டெமர்லோ, பெராவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஜோகூரில், தங்காக், மூவார், பத்து பஹாட், பொண்தியன், குலாய், ஜோகூர் பாரு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகாரப்பூர்வ MetMalaysia வலைத்தளம், myCuaca மொபைல் செயலி, அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் அல்லது 1-300-22-1638 என்ற மெட்மலேசியா ஹாட்லைனை அழைப்பதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட வானிலை தகவல்களை பெறலாம்.
- பெர்னாமா
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 12:21 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
இன்று தலைநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வள்ளுவர் மறை வைரமுத்து உரை
December 16, 2025, 5:21 pm
