செய்திகள் மலேசியா
பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.
சமீபத்தில் அதிகாரிகள் அறிவித்த 880,000 பாலியல் கோப்புகள் அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளன.
இது தொடர்பாக 31 கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆக 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டங்கள், இணைய பாதுகாப்புச் சட்டம் 2025 அமலாக்கத்துடன், மலேசியாவின் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன.
இந்த நடவடிக்கை மலேசியாவை தடுப்பு அணுகுமுறைக்கு மாற்றுகிறது.
இதன் அடிப்படையில் பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் எந்தவொரு கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்.
இது பிள்ளைகள் பாதுகாப்பான முறையில் இணையத்தை பயன்படுத்த வழிவகுக்கும்.
குறிப்பாக பிள்ளைகள் இணையத்தை பயன்படுத்துவது குறித்து பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தாது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 10:24 pm
கிழக்கு கடற்கரை மாநிலங்கள், ஜொகூரில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும்
December 15, 2025, 10:21 pm
குழந்தைகள், குடும்பங்களுக்கான பாதுகாப்பான இணையம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது: எம்சிஎம்சி
December 15, 2025, 4:46 pm
சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு UEC சான்றிதழ் அவசியம் இல்லை: அஷ்ரஃப் வாஜ்தி
December 15, 2025, 1:25 pm
அநாகரீகப் பேச்சு; ஜாஹித் ஹமிடியின் தன்மையை பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 15, 2025, 1:22 pm
அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு துணை நிற்பேன்: டத்தோ சிவக்குமார்
December 15, 2025, 1:08 pm
எஸ்எம் முஹம்மத் இத்ரிஸின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
December 15, 2025, 10:08 am
