செய்திகள் மலேசியா
எஸ்எம் முஹம்மத் இத்ரிஸின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
ஹாஜி எஸ் எம் முஹம்மத் இத்ரிஸின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் உட்பட பல அமைப்புகளின் முன்னோடித் தலைவராக எஸ்எம் முஹம்மத் இட்ரிஸ் விளங்கி பல பணிகளை இந்த சமூகத்திற்கு செய்தார்.
பயனீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதல் மரங்கள், இயற்கை வளத்தை பாதுகாக்க எஸ்எம் முஹம்மத் இத்ரிஸ் தன் வாழ்நாள் முழுவதும் போராடி உள்ளார்.
அனைத்து பிரச்சினைகளிலும் அவரின் குரல் மிகவும் வலுவாக இருக்கும்.
ஒரு சாதாரண நிலையில் இருந்து கொண்டு அவர் அனைத்து பிரச்சினைகளுக்கும் யாருக்கும் அஞ்சாமல் அவர் குரல் கொடுத்து வந்துள்ளார்.
அவர் முன்னெடுத்த போராட்டங்களின் வாயிலாக எஸ்எம் முஹம்மத் இத்ரிஸ் மதிக்கத்தக்க மாமனிதராக உள்ளார்.
எஸ்எம் முஹம்மத் இத்ரிஸ் இன்று நம்முடன் இல்லை. இருந்தாலும் அவரின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்.
அரசியல் தலைவர்கள் முதல் சமூக போராட்டவாதிகள் என அனைவரும் அவரின் போராட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும்.
பெட்டாலிங் ஜெயா ஐஏஐஎஸ்சில் நடைபெற்ற எஸ்எம் முஹம்மத் இத்ரிஸின் நினைவு புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
மக்களவை சபாநாயகர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி, கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹைதின் அப்துல் காதிர், இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால், யாயாசன் உபைதி அற வாரியத் தலைவர் டத்தோ ஹிஷாமுத்தீன், சேகு அஸ்மி, பேங்க் ராயாட் வங்கியின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ வசிஹர் ஹசன், தி அதர் பிரஸ் இயக்குனர் ஹாஜி கோயா குட்டி, சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ் கான், அமானா உச்ச மன்ற உறுப்பினர் ஹாஜி பஷீர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 10:24 pm
கிழக்கு கடற்கரை மாநிலங்கள், ஜொகூரில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும்
December 15, 2025, 10:23 pm
பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
December 15, 2025, 10:21 pm
குழந்தைகள், குடும்பங்களுக்கான பாதுகாப்பான இணையம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது: எம்சிஎம்சி
December 15, 2025, 4:46 pm
சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு UEC சான்றிதழ் அவசியம் இல்லை: அஷ்ரஃப் வாஜ்தி
December 15, 2025, 1:25 pm
அநாகரீகப் பேச்சு; ஜாஹித் ஹமிடியின் தன்மையை பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 15, 2025, 1:22 pm
அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு துணை நிற்பேன்: டத்தோ சிவக்குமார்
December 15, 2025, 10:08 am
