செய்திகள் மலேசியா
அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு துணை நிற்பேன்: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு தொடர்ந்து துணை நிற்பேன்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
தலைநகரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியின் திறன்மிகு மாணவர் உருவாக்க விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைமையேற்று டத்தோ சிவக்குமார் உரையாற்றினார். அவர் கூறியதாவது,
அப்பர் தமிழ்ப்பள்ளி தொடக்கத்தில் இடைநிலைப் பள்ளியாக விளங்கியது. கால ஓட்டத்தில் இந்தப் பள்ளி தொடக்கப் பள்ளியாக மாறியது.
இப்பள்ளி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் செயல்பட்டு வருவது வரலாறாகும்.
தற்போது இந்தப் பள்ளி மாணவர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும் தேவஸ்தானத்தின் சார்பில் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட பேருந்து தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்தப் பேருந்து விரைவில் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு துணை நிற்பேன் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 10:24 pm
கிழக்கு கடற்கரை மாநிலங்கள், ஜொகூரில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும்
December 15, 2025, 10:23 pm
பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
December 15, 2025, 10:21 pm
குழந்தைகள், குடும்பங்களுக்கான பாதுகாப்பான இணையம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது: எம்சிஎம்சி
December 15, 2025, 4:46 pm
சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு UEC சான்றிதழ் அவசியம் இல்லை: அஷ்ரஃப் வாஜ்தி
December 15, 2025, 1:25 pm
அநாகரீகப் பேச்சு; ஜாஹித் ஹமிடியின் தன்மையை பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 15, 2025, 1:08 pm
எஸ்எம் முஹம்மத் இத்ரிஸின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
December 15, 2025, 10:08 am
