செய்திகள் மலேசியா
எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் தேசிய முன்னணிக்கு ஐபிஎப் கட்சி விசுவாசமாக இருக்கிறது: மோகன்
செமினி:
ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட ஐபிஎப் கட்சி எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் தேசிய முன்னணிக்கு முழு விசுவாசமாக இருக்கிறது.
ஐபிஎப் கட்சியின் தலைமை செயலாளர் மோகன் முத்துசாமி தெரிவித்தார்.
ஐபிஎப் கட்சி தொடங்கப்பட்ட 33 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த 33 ஆண்டுகளாக ஐபிஎப் கட்சி தேசிய முன்னணிக்கு கடுமையாக உழைத்து வருகிறது.
நாங்கள் எந்தவொரு பலனையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. ஐபிஎப் மக்களுக்காக உண்மையாக உழைக்கும் கட்சி.
நாங்கள் தொடர்ந்து தேசிய முன்னணிக்கு முழு விசுவாசமாக இருப்போம் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறோம்.
இன்று காலையில் செமினி எக்கோ வோல்ட் மாநாட்டு மண்டபத்தில் ஐபிஎப் கட்சியின் 33ஆவது பேராளர் மாநாட்டில் வரவேற்புரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 14, 2025, 6:02 pm
கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்யும் வரை தேசிய முன்னணியுடன் மஇகா ஒத்துழைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 5:58 pm
ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் டத்தோஸ்ரீ அன்வார் நேர்மையானவராக இருந்தார்: ஜாஹித்
December 14, 2025, 4:42 pm
தாப்பாவில் மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 4:40 pm
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் கட்சிகள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது: ஜாஹித்
December 14, 2025, 3:40 pm
நாட்காட்டிகளை வழங்கிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பாதுகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்
December 14, 2025, 3:26 pm
அரசாங்கத் துறையில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவை தடுக்க வேண்டும்: குலசேகரன்
December 14, 2025, 11:55 am
ஐபிஎப் கட்சி தேசிய முன்னணியில் இணையும் காலம் மிக விரைவில் உள்ளது: ஜாஹித்
December 14, 2025, 11:43 am
