நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் கட்சிகள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது: ஜாஹித்

செமினி:

தேசிய முன்னணி கூட்டணியை விட்டு வெளியேறியதற்காக உறுப்பு கட்சிகள் வருத்தப்பட வேண்டாம் என்று நினைவூட்டுகிறோம்.

ஏனெனில் சம்பந்தப்பட்ட கட்சி மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று அதிரடியாக கூறினார்.

தேசிய முன்னணி உறுப்பு கட்சிகள் கூட்டணியில் ஏழு தசாப்தங்களாக நிலவிய நட்பின் வரலாற்றைப் பாராட்ட வேண்டும்.

அரசியல் முடிவுகளை உணர்ச்சிபூர்வமாக எடுக்கக்கூடாது.

அரசியல் சூழல் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால் அரசியலுக்கு பொறுமை மற்றும் பகுத்தறிவு ரீதியான பரிசீலனை தேவை என்று அவர் கூறினார்.

குறிப்பாக எந்தக் கட்சியையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், தேசிய முன்னணி தலைவரின் அறிக்கை    மஇகாவை குறிப்பதாக நம்பப்படுகிறது.

தேசிய முன்னணி, ம இகா இடையே  தற்போது கூட்டணிக்குள் இறுக்கமான உறவுகளை எதிர்கொள்கிறது.

தேசிய முன்னணியில் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான நட்பு, விசுவாசத்தின் வரலாற்றை மதிக்க வேண்டும்.

இது அதிருப்தி அல்லது அதிகார போதை காரணமாக ஒதுக்கி வைக்கக்கூடாது.

நாங்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருக்கிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், '
அதிகார போதை காரணமாக முடிவுகளை எடுக்காதீர்கள்.


சில கட்சிகள் கயிறு இல்லாமல் தொங்கும் நிலைக்குத் தள்ளப்படுமோ என்று நான் கவலைப்படுகிறேன்.

இன்று ஐபிஎப் கட்சியின் 33 ஆவது தேசிய பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset