செய்திகள் மலேசியா
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
கோலாலம்பூர்:
இன்று மாலை 4 மணி முதல் தலைநகரில் கனமழை பெய்து வருகிறது.
இதன் விளைவாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடைபட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட இடங்களில் சாலை பயன்படுத்துபவர்கள் சிரமப்படுகிறார்கள்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம், போக்குவரத்து தகவல் அடிப்படையில் ஜாலான் லொக் யூ, ஜாலான் சங்கட் தம்பி டோலா, ஜாலான் யூ ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரின் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜாலான் ராஜா சோலானில் திடீர் வெள்ளம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட தகவலில், தேசா பாண்டன், தாமான் டேசா, செராஸ், ஜாலான் சங்கட் தம்பி டோலா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காட்டியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 11:05 pm
பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
