செய்திகள் மலேசியா
ஐபிஎப் கட்சியின் 33ஆவது தேசிய பேராளர் மாநாடு: டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும்
கோலாலம்பூர்:
ஐபிஎப் கட்சியின் 33ஆவது தேசிய பேராளர் மாநாடு வரும் டிசம்பர் 14ஆம் தேதி செமினியில் Club 360, Ecohill நடைபெறவுள்ளது.
ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று ஐபிஎப் கட்சியின் தலைமை செயலாளர் மோகன் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தேசிய முன்னணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஏழை எளிய மக்களுக்காக அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் ஐபிஎப் கட்சியை தோற்றுவித்தார்.
பல சவால்கள், போராட்டங்கள் மத்தியில் ஐபிஎப் கட்சி இன்றும் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.
வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎப் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மோகன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
சபா மாநில சட்டமன்றத்தில் அலியாக்பர் ஹாஜிஜியை ஆதரிப்பார்: பாஸ்
December 11, 2025, 8:55 pm
