செய்திகள் இந்தியா
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
கோவா:
கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீச் சம்பவத்திற்கு மின்சாரப் பட்டாசு காரணம் என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் (Pramod Sawant) தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த விவரங்கள் வெளிவந்தன.
குறைந்தது 25 பேர் தீச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
காயமடைந்த 6 பேர் சீரான நிலையில் உள்ளனர்.
மாண்டோரில் ஐவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள், 20 பேர் இரவு விடுதியில் வேலை செய்த ஊழியர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஊழியர்களில் பலர் இரவு விடுதியின் சமையல் அறையில் பணிபுரிந்தவர்கள் என்று சாவந்த் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு இரவு விடுதியின் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி அளித்த 3 மூத்த மாநில அதிகாரிகள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இரவு விடுதியின் பொது மேலாளர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அதன் உரிமையாளருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இண்டியா
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
