செய்திகள் இந்தியா
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
ஷில்லாங்:
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியின் மைன்ஸ்ங்காட்–தாங்ஸ்காய் பகுதியில் அங்கீகரிக்கப்படாத நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டுவந்திருக்கிறது.
இந்தச் சுரங்கத்தில் நேற்று அதிகாலை தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் இரவு வரை மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய விகஷ் குமார், ``மீட்புப் பணியின் போது இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்த ஒரு தொழிலாளி மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்" என்றார்.
இந்த விபத்து 'எலி வளைச் சுரங்கம்' (Rat-hole mining) எனப்படும் ஆபத்தான முறையால் ஏற்பட்டுள்ளது. நிலக்கரியைப் பிரித்தெடுக்க வெறும் 3 முதல் 4 அடி உயரமே கொண்ட குறுகிய குகைகளைத் தோண்டும் இம்முறை, மேகாலயாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறுகிய லாபத்திற்காக இந்த விதிகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, இந்தச் சட்டவிரோத சுரங்கப் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த தகவல்களைத் தருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
