செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
மெல்பெர்ன்:
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தின் சில பகுதிகளில் இயற்கைப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு 70க்கும் மேற்பட்ட காட்டுத் தீச் சம்பவங்களை எதிர்த்து தீயணைப்பு வீரர்கள் போராடுகின்றனர்.
எதிர்வரும் கோடைக்காலத்தில் நிலைமை இன்னும் சிக்கலாகலாம் என்று பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) எச்சரித்துள்ளார்.
சிட்னி நகருக்கு வடக்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் 350,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் பகுதி காட்டுத் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நல்லவேளையாக இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று ஆல்பனீசி குறிப்பிட்டார்.
இயற்கைப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டதால் குடியிருப்பாளர்கள், வர்த்தகங்கள், விவசாயிகள் ஆகிய தரப்புகளுக்கு ஆதரவு வழங்க அது உதவியாக அமையும்.
இதுவரை 12 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன.
ஆயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலம் தீக்கு இரையானது.
அதிகரிக்கும் வெப்பநிலையால் காட்டுத்தீ மோசமாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 6:47 pm
சிங்கப்பூரில் $5,000 சம்பளத்துக்கு ஆள் தேடும் Tower Transit
June 26, 2026, 12:57 pm
அடையாளம் தெரியாத பொருளால் தாக்கப்பட்ட சரக்குக் கப்பல்: ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்
June 25, 2026, 4:24 pm
பாங்காக்கில் கொதிக்கும் வெப்ப அச்சுறுத்தல்
June 25, 2026, 4:09 pm
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: குறைந்தது 32 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் காயம்
June 25, 2026, 2:54 pm
கொளுத்தும் வெயில்: பிரான்சில் மக்கள் அவதி
June 25, 2026, 11:41 am
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
