செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
மெல்பெர்ன்:
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தின் சில பகுதிகளில் இயற்கைப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு 70க்கும் மேற்பட்ட காட்டுத் தீச் சம்பவங்களை எதிர்த்து தீயணைப்பு வீரர்கள் போராடுகின்றனர்.
எதிர்வரும் கோடைக்காலத்தில் நிலைமை இன்னும் சிக்கலாகலாம் என்று பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) எச்சரித்துள்ளார்.
சிட்னி நகருக்கு வடக்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் 350,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் பகுதி காட்டுத் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நல்லவேளையாக இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று ஆல்பனீசி குறிப்பிட்டார்.
இயற்கைப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டதால் குடியிருப்பாளர்கள், வர்த்தகங்கள், விவசாயிகள் ஆகிய தரப்புகளுக்கு ஆதரவு வழங்க அது உதவியாக அமையும்.
இதுவரை 12 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன.
ஆயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலம் தீக்கு இரையானது.
அதிகரிக்கும் வெப்பநிலையால் காட்டுத்தீ மோசமாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
