நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்

புதுடெல்லி: 

இண்​டிகோ விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்ட பிரச்​சினை குறித்து கருத்து தெரி​வித்த காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, ஒரு நிறு​வனத்​தின் ஏகபோகத்​தால் அப்​பாவி மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இண்​டிகோ விமானங்​களின் சேவை ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தால், பயணி​கள் கடும் பாதிப்பை சந்​தித்​துள்​ளனர். இதுகுறித்​து, அவர் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பாஜக தலை​மையி​லான மத்​திய அரசு, ஏகபோக​மாக ஒரு நிறு​வனத்​தின் ஆதிக்​கத்​தில் விட்​டதன் விளைவு​தான் இது.

அதனால் விமானங்​கள் ரத்​து, தாமதம் என அப்​பாவி மக்​கள் பாதிக்​கப்​படு​கின்​றனர். அப்​பாவி மக்​கள் அதற்​கான விலையை கொடுக்​கின்​றனர். நாட்​டில் எந்த துறை​யாக இருந்​தா​லும், ஆரோக்​கிய​மான போட்டி இருக்க வேண்​டும். ஒரு நிறு​வனமே ஆதிக்​கம் செலுத்​தும் வகை​யில் இருக்க கூடாது. இதில் மேட்ச் பிக்​சிங் இருக்க கூடாது. இவ்​வாறு கூறி​யுள்​ளார்.

நோட்​டீஸ்: மேலும் இந்த விவ​காரம் குறித்து மாநிலங்​களவை​யில் விவா​திக்​க​வும் இதற்கு சிவில் விமானப் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ராம் மோகன் நாயுடு பதில் அளிக்க வேண்​டும் என வலி​யுறுத்தியும் சிவசேனா (உத்​தவ் அணி) எம்​.பி. பிரி​யங்கா சதுர்​வேதி விதி 180-ன் கீழ் நோட்​டீஸ் அளித்​துள்​ளார்.

அதில், “இண்​டிகோ நிறு​வனத்​தில் நூற்​றுக்​கணக்​கான விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​ட​தால், பயணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். முக்​கிய நகரங்​களில் பயணி​கள் குவிந்​துள்​ளனர். 

இந்த விஷ​யத்​தில் அமைச்​சர் ராம் மோகன் நாயுடு உடனடி​யாக கவனம் செலுத்த வேண்​டும். இது பொது​மக்​களின் அவசர பிரச்​சினை. எனவே, மாநிலங்​களவை​யில் இதுகுறித்து உடனடி​யாக விவாதம் நடத்த வேண்​டும். அமைச்​சர் பதில் அளிக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset