செய்திகள் இந்தியா
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
புதுடெல்லி:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) நாளை மறுநாள் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி, எரிசக்தி, தற்காப்புத் திறன் மேம்பாடு குறித்து அவர் இந்தியத் தலைவர்களுடன் பேசுவார்.
இந்தியாவுக்கு ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் விற்பது குறித்தும் அதிபர் புட்டின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த பின் இந்தியா தொடர்ந்து அதன் சொந்த நலன்களை விட்டுக்கொடுக்காமல், ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது.
ஆனால் ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவளித்து வருவதாக அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவருகிறது.
ரஷ்யா மீதான தடைகள் கடுமையாக்கப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மூவாண்டுகளில் இல்லாத அளவில் ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புட்டின் நாலாண்டில் முதன்முறையாக இந்தியா செல்கிறார்.
அவருடன் தற்காப்பு அமைச்சரும் வர்த்தக, தொழில்துறைப் பேராளர்களும் செல்வர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
