செய்திகள் இந்தியா
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
புதுடெல்லி:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) நாளை மறுநாள் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி, எரிசக்தி, தற்காப்புத் திறன் மேம்பாடு குறித்து அவர் இந்தியத் தலைவர்களுடன் பேசுவார்.
இந்தியாவுக்கு ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் விற்பது குறித்தும் அதிபர் புட்டின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த பின் இந்தியா தொடர்ந்து அதன் சொந்த நலன்களை விட்டுக்கொடுக்காமல், ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது.
ஆனால் ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவளித்து வருவதாக அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவருகிறது.
ரஷ்யா மீதான தடைகள் கடுமையாக்கப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மூவாண்டுகளில் இல்லாத அளவில் ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புட்டின் நாலாண்டில் முதன்முறையாக இந்தியா செல்கிறார்.
அவருடன் தற்காப்பு அமைச்சரும் வர்த்தக, தொழில்துறைப் பேராளர்களும் செல்வர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
மாணவியின் பலிக்கு 'பகடிவதை' காரணமா?: கதறும் தாயின் வாக்குமூலம்
April 18, 2026, 5:10 pm
கடனை திருப்பிக் கேட்ட கடைக்காரருக்கு நேர்ந்த கதி: ஆத்திரத்தில் காதை கடித்துக் குதறிய பெண்
April 18, 2026, 5:06 pm
காதலனைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற காதலி
April 18, 2026, 7:21 am
இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி
April 17, 2026, 5:54 pm
