செய்திகள் உலகம்
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
சிங்கப்பூர்:
சமூகத்திற்கு பல்வேறு வகைகளில் உதவிக்கரம் நீட்டியதற்கும் சமூக சேவைக்குப் பங்களித்ததற்கும் ராயல் கிங்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கேரி ஹாரிஸ் சிறப்பிக்கப்பட்டார்.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி நிகழ்ச்சியில் சமூக சேவைக்கான உன்னத விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ராயல் கிங்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஹாரிஸ், ராயல் கிங்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களின் ஆர்வலராகவும் வழிகாட்டியாகவும் இருந்துவந்துள்ளார். அவர் ராயல் கிங்ஸ் குழுமத்தில் மூத்த வணிக மேம்பாட்டு மேலாளராக இருக்கிறார்.
அனுபவமிக்க சமுதாயத் தலைவருமான அவர் பலமுறை, அவசரகாலங்களில் விரைவாகச் செயல்பட்டு சமுதாயத்திற்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்களித்து வருகிறார்.
அக்டோபர் 5ஆம் தேதி செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி சிங்கப்பூர், இந்தியாவிற்கு இடையேயான 60 ஆண்டுகால அரசதந்திர நட்புறவின் கொண்டாட்டத்தையும் குறித்தது. அது இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த பிணைப்பையும் பிரதிபலித்தது.
ராயல் கிங்ஸ் குழுமத்தின் தலைமையில் 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 120 தொண்டூழியர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான பண்டிகைக்கால உணர்வு தென்பட்டது.
இந்தியாவும் சிங்கப்பூரும் 60 ஆண்டுகளாக வலுவான பல்வகைப்பட்ட கூட்டாண்மையை வளர்த்து வந்துள்ளன.
வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் உள்ள வலுவான ஒத்துழைப்பு முதல் ஆழமான கலாசார, கல்வி, பரிமாற்றங்கள் வரை இந்திய-சிங்கப்பூர் உறவானது மக்களிடையேயான தொடர்புக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
‘ராயல் கிங்ஸ்’ குழுமம் கடந்த பத்தாண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்திய வர்த்தகர்கள், சிங்கப்பூரில் புதிதாகத் தங்கள் தொழில்களை நிறுவுவதற்கு ராயல் கிங்ஸ் குழுமம் உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
காசாவில் நீடிக்கும் போர் பதற்றம்: அமெரிக்கா - ஹமாஸ் பேச்சுவார்த்தை தோல்வி
April 18, 2026, 11:17 am
சிறையிலிருந்து விடுதலை: மியான்மர் முன்னாள் அதிபர் வின் மைண்டிற்கு பொது மன்னிப்பு
April 18, 2026, 10:00 am
“யுரேனியத்தை ஒப்படைக்க முடியாது”: அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஈரான் கடும் பதிலடி
April 17, 2026, 5:29 pm
“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்”: ட்ரம்ப்
April 17, 2026, 1:01 pm
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம்: டிரம்ப் அறிவித்தார்
April 17, 2026, 11:57 am
தொடர்பு துண்டிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி: பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
April 17, 2026, 11:30 am
