செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
சிங்கப்பூர்:
உயர்நிலைப் பள்ளி நேரங்களில் கைத்தொலைபேசிகள், பலபயன் கைக்கடிகாரங்கள் போன்ற அறிவார்ந்த சாதனங்களை அடுத்த ஆண்டுமுதல் பயன்படுத்த முடியாது.
இடைவேளை நேரம், இணைப்பாட வகுப்புகள் உட்பட்ட நேரங்களிலும் அவற்றைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான மின்னிலக்கப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கக் கல்வி அமைச்சு அந்த மாற்றத்தைக் கொண்டுவருகிறது.
பள்ளிகளில் மாணவர்களின் திரைநேரத்தை நிர்வகிக்கப் புதிய வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பள்ளி நேரங்களில் மாணவர்கள் அவர்களுடைய கைத்தொலைபேசிகள், பலபயன் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றைப் பள்ளிப்பையிலோ அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திலோ வைத்துக்கொள்ளலாம்.
தேவைப்பட்டால் மட்டும் அறிவார்ந்த சாதனங்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மாணவர்கள் பாடங்களுக்குப் பயன்படுத்தும் தனிப்பட்ட மின்னிலக்கச் சாதனங்கள் தினமும் இரவு 10.30 மணிக்கு அணைந்துவிடும். முன்னர் அது 11 மணிக்கு அணைந்துகொண்டிருந்தது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
இந்தோனேசியாவில் நிலச்சரிவு, கடும் வெள்ளம்: 16 பேர் பலி
November 26, 2025, 7:24 am
1MDB மோசடி: Standard Chartered வங்கிக்கு எதிராக $3.52 பில்லியன் வழக்கு
November 25, 2025, 3:12 pm
சிங்கப்பூரில் குறுந்தகவல் மோசடி: தடுக்க Apple, Google நிறுவனங்களுக்கு உத்தரவு
November 24, 2025, 7:17 pm
