நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்

சிங்கப்பூர்:

2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்படவிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு டிசம்பர் முதல் தேதியிலிருந்து குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஹஜ் யாத்திரைக்குச் செல்லத் தயாராவதற்குப் போதிய அவகாசம் வழங்க அனுமதிக் கடிதம் முன்கூட்டியே அனுப்பப்படுகிறது.

அனுமதிக் கடிதத்தைப் பெறுவோர், MyHajSG இணையதளத்திற்கு  சென்று, புனிதப் பயணம் செல்லும் தங்கள் முடிவை உறுதிசெய்யவேண்டும்.

இஸ்லாமியச் சமய மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற பயண முகவர்கள் மூலமாக மட்டுமே ஹஜ் யாத்திரைக்குச் செல்வதற்கான பயணத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset