செய்திகள் உலகம்
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
ஹாங்காங்:
ஹாங்காங்கின் தை போ (Tai Po) வட்டாரத்தின் குடியிருப்புக் கட்டடத்தில் மூண்ட தீயில் மாண்டோரின் எண்ணிக்கை 128க்கு உயர்ந்துள்ளது. பலரை இன்னும் காணவில்லை.
வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்புப் பேட்டையில் 8 கட்டடங்கள் உள்ளன.
அவற்றில் 4 கட்டடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
11 தீயணைப்பாளர்கள் உட்பட 79 பேர் காயமடைந்ததாக அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.
ஹாங்காங்கில் 80 ஆண்டுகளில் ஏற்படாத மோசமான தீச்சம்பவமாக இது கருதப்படுகிறது.
தீ பரவியதன் காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பேட்டையில் நடந்துகொண்டிருந்த புதுப்பிப்புப் பணி குறித்து நகரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு புலனாய்வு செய்கிறது.
தீச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதுப்பிப்புப் பணிக்குப் பயன்படுத்திய நுரை பொருள்களைத் (foam packaging) தீ மூண்ட இடத்தில் அலட்சியமாக விட்டுச்சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தீ ஏற்பட்டபோது எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்று குடியிருப்புப் பேட்டையில் வசிப்போர் கூறினர்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
