செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் நிலச்சரிவு, கடும் வெள்ளம்: 16 பேர் பலி
ஜாகர்த்தா:
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனத்த மழை காரணமாக நிலச்சரிவும் திடீர் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. குறைந்தது 16 பேர் மாண்டனர். மேலும் 10 பேரைக் காணவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
மீட்புக் குழுக்கள் வட சுமத்ராவில் சிக்கியுள்ள மக்களைச் சென்றடைய சிரமப்படுவதாக அது தெரிவித்தது.
சிபொல்கா (Sibolga) பகுதியில் ஆகக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் 5 பேரின் சடலங்களையும் காயமடைந்த 3 பேரையும் மீட்டனர். இன்னும் 4 பேரைத் தேடுகின்றனர்.
அருகிலுள்ள மத்திய தபனுலி (Central Tapanuli) வட்டாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாண்டனர். சுமார் 2,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
மன்டாய்லிங் நடால் (Mandailing Natal) வட்டாரத்தில் பாலம் ஒன்று சேதமடைந்தது. 470 வீடுகள் புதையுண்டன.
அவசரகாலத் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சிபொல்காவின் காவல்துறைத் தலைவர் கூறினார். அபாயமிக்க வட்டாரங்களில் இருந்து உடனே வெளியேறும்படி குடியிருப்பாளர்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டது.
அக்டோபரிலிருந்து மார்ச் வரை இந்தோனேசியாவில் பருவமழையை எதிர்பார்க்கலாம். அதனால் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்படுவது வழக்கம்.
தொடர்புடையவை:
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
