செய்திகள் மலேசியா
உணவகத் துறைக்கு அந்நியத் தொழிலாளர்களுக்கான சிறப்பு அனுமதி; பிரதமர் கருணை காட்ட வேண்டும்: டத்தோ மோசின் வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
உணவகத் துறைக்கு அந்நியத் தொழிலாளர்களுக்கான சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்.
பிரதமர் இதற்கு கருணை காட்ட வேண்டும் என்று டத்தோ முகமத் மோசின் இதனை வலியுறுத்தினார்.
அந்நிய தொழிலாளர்கள் இல்லாமல் உணவகத் துறை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இத்தொழிலாளர்களுக்காக ஒவ்வொரு உணவக உரிமையாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் உணவகத் துறைக்கான கந்தியான் எனப்படும் மாற்று தொழிலாளர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக உள்ளது.
இதனால் கிடைக்கும் இதன் மூலம் கிடைக்கும் அந்நியத் தொழிலாளர்களையும் நாங்கள் இழந்து வருகிறோம்.
ஆக இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும்.
குறிப்பாக உணவகத் துறைக்கு அந்நியத் தொழிலாளர்களுக்கான சிறப்பு அனுமதி அரசாங்கம் வழங்க வேண்டும்.
இதற்கு இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும்.
பிரதமரால் மட்டுமே எங்களின் பிரச்சினைக்கு தீர்வை கொடுக்க முடியும்.
ஆக பிரதமர் எங்கள் மீது கருணை கொண்டு உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என டத்தோ முகமத் மோசின் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 26, 2025, 12:33 pm
ஷம்சுல் இஸ்கந்தரை விசாரிக்க எம்ஏசிசிக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது: பிரதமர்
November 26, 2025, 12:31 pm
கோலாலம்பூரில் மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழா; பொதுமக்கள் திரண்டு வர வேண்டும்: டத்தோ மோசின்
November 26, 2025, 10:36 am
ஆதரவு கடிதத்தற்காக தான் ஷம்சுல் ராஜினாமா செய்தார்; பணம் வாங்கியதற்காக அல்ல: ங்கா
November 26, 2025, 10:35 am
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
