செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழா; பொதுமக்கள் திரண்டு வர வேண்டும்: டத்தோ மோசின்
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
பிரெஸ்மா தலைவர் டத்தோ முகமத் மோசின் இதனை கூறினார்.
நாசி கண்டார் பினாங்கு மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
அந்த வகையில் நாசி கண்டார் 3.0 உணவு திருவிழா இம்முறை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிழா வரும் நவம்பர் 29, 30ஆம் தேதிகளில் DATUM Jelatek Shopping Center Kuala Lumpur என்ற இடத்தில் காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை நடைபெறுகிறது.
பினாங்கு, கோலாலம்பூர், ஜொகூர் மாநிலத்தில் உள்ள நாசி கண்டார் உணவகங்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து இந்த மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழாவில் பங்கேற்கிறது.
நாசி கண்டார் உணவை விரும்பி சாப்பிடும் மலேசியர்கள் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
2926 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரியுங்கள் ஆண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உலக அளவில் நாசி கண்டார் உணவை பிரபலப்படுத்தும் வகையில் இந்த உணவுத் திருவிழா மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மாலை 3.33 மணிக்கு நாசி கண்டார் வாங்கும் 333 பேருக்கு தலா 3 வெள்ளிக்கு விற்கப்படும்.
தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட நாசி கண்டார் உணவை விரும்பி சாப்பிடுகின்றனர்.
அந்த அளவுக்கு இன்று நாசி கண்டார் உணவு புகழ்பெற்று விளங்குகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 26, 2025, 12:33 pm
ஷம்சுல் இஸ்கந்தரை விசாரிக்க எம்ஏசிசிக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது: பிரதமர்
November 26, 2025, 10:36 am
ஆதரவு கடிதத்தற்காக தான் ஷம்சுல் ராஜினாமா செய்தார்; பணம் வாங்கியதற்காக அல்ல: ங்கா
November 26, 2025, 10:35 am
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
