செய்திகள் மலேசியா
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
கோலாலம்பூர்:
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலான சம்பவம் தொடர்பில் ஆம் பேங்க் மன்னிப்பு கோரியுள்ளது.
கோலாலம்பூரின் தாமான் மலூரி கிளைக்கு வெளியே வீடற்றவர் என்று நம்பப்படும் ஒரு நபர் மீது தண்ணீரில் ஊற்றப்பட்டு உதைக்கப்படுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
குறிப்பாக பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சம்பவத்தால் மிகவும் கவலையும் வருத்தமும் அடைந்துள்ளதாக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கி வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பே அதன் முதன்மையான முன்னுரிமை என்று வலியுறுத்தியுள்ளது.
நடந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளோம்.
எந்தவொரு நபரும் இந்த முறையில் நடத்தப்படக்கூடாது.
நாங்கள் அனைத்து அதிகாரிகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதே எங்கள் குறிக்கோள் என்று வங்கி தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
