செய்திகள் மலேசியா
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
கோலாலம்பூர்:
விளையாட்டு நிருபரும் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தின் துணைத் தலைவருமான ஹரேஷ் தியோல் இரண்டு நபர்களால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று பங்சாரில் நடந்தது.
TwentyTwo13 என்ற இணைய செய்தி தளத்தின் இணை நிறுவனருமான ஹரேஷ், தனது காரில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
மற்றொரு நபர் கைத்தொலைபேசியில் சம்பவத்தை படம் பிடித்ததாகவும் எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவில் அறிவித்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து போலிஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி ஹூ சாங் ஹூக்கைத் தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
மேலும் சந்தேக நபரையும் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சுயேட்சை ஊடக இயக்கம் (ஜெராம்) முகநூலில் ஒரு பதிவில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து.
பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் இது என்று விவரித்தது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் துல்லியமான தகவல்களைப் பெறும் பொதுமக்களின் உரிமையைப் பாதிக்கும் என அவ்வியக்கம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
