செய்திகள் மலேசியா
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
கோலாலம்பூர்:
விளையாட்டு நிருபரும் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தின் துணைத் தலைவருமான ஹரேஷ் தியோல் இரண்டு நபர்களால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று பங்சாரில் நடந்தது.
TwentyTwo13 என்ற இணைய செய்தி தளத்தின் இணை நிறுவனருமான ஹரேஷ், தனது காரில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
மற்றொரு நபர் கைத்தொலைபேசியில் சம்பவத்தை படம் பிடித்ததாகவும் எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவில் அறிவித்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து போலிஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி ஹூ சாங் ஹூக்கைத் தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
மேலும் சந்தேக நபரையும் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சுயேட்சை ஊடக இயக்கம் (ஜெராம்) முகநூலில் ஒரு பதிவில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து.
பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் இது என்று விவரித்தது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் துல்லியமான தகவல்களைப் பெறும் பொதுமக்களின் உரிமையைப் பாதிக்கும் என அவ்வியக்கம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 7:11 pm
தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
