செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு கண்டுள்ளது.
கனமழையை தொடர்ந்து பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 8,308 குடும்பங்கள் அடங்கும். 26 மாவட்டங்களில் 142 வெள்ள நிவாரண மையங்கள் செயல்படுகின்றன.
தேசிய பேரிடர் மேலாண்மை மையம் இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, எட்டு மாநிலங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.
கிளந்தான், பெர்லிஸ், பேரா, சிலாங்கூர், கெடா, திராங்கானு, பினாங்கு, பகாங் என ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காட்டுகிறது.
குறிப்பாக வடக்குப் பகுதிகள், கிழக்கு கடற்கரையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வெள்ளத்தில் கிளந்தான் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.
தும்பட், கோத்தா பாரு, பாச்சோக், பாசிர் பூத்தே ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட 9,525 பேர் தற்போது 40 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
தும்பாட் பகுதியில் அதிகபட்சமாக 4,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அந்தப் பகுதியில் குறைந்து வரும் போக்கு பதிவாகியுள்ளது.
இருப்பினும், கோத்தா பாரு, பாச்சோக், பாசிர் பூத்தே ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அம்மையம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 26, 2025, 10:36 am
ஆதரவு கடிதத்தற்காக தான் ஷம்சுல் ராஜினாமா செய்தார்; பணம் வாங்கியதற்காக அல்ல: ங்கா
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
