செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு கண்டுள்ளது.
கனமழையை தொடர்ந்து பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 8,308 குடும்பங்கள் அடங்கும். 26 மாவட்டங்களில் 142 வெள்ள நிவாரண மையங்கள் செயல்படுகின்றன.
தேசிய பேரிடர் மேலாண்மை மையம் இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, எட்டு மாநிலங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.
கிளந்தான், பெர்லிஸ், பேரா, சிலாங்கூர், கெடா, திராங்கானு, பினாங்கு, பகாங் என ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காட்டுகிறது.
குறிப்பாக வடக்குப் பகுதிகள், கிழக்கு கடற்கரையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வெள்ளத்தில் கிளந்தான் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.
தும்பட், கோத்தா பாரு, பாச்சோக், பாசிர் பூத்தே ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட 9,525 பேர் தற்போது 40 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
தும்பாட் பகுதியில் அதிகபட்சமாக 4,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அந்தப் பகுதியில் குறைந்து வரும் போக்கு பதிவாகியுள்ளது.
இருப்பினும், கோத்தா பாரு, பாச்சோக், பாசிர் பூத்தே ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அம்மையம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 7:11 pm
தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
