நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்

புத்ராஜெயா:

பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை தாம் ராஜினாமா செய்வதாக ஷம்சுல் இஸ்கந்தர் அறிவித்துள்ளார்.

இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட அவர்,

அந்தக் கடிதம் இன்று காலை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.

2024 ஆம் ஆண்டு மருத்துவமனை திட்டத்திற்கான ஒப்பந்ததாரருக்கு ஆதரவு கடிதம் வழங்கியதற்காக டத்தோஸ்ரீ அன்வார் தனது அரசியல் செயலாளரை கடுமையாக கண்டித்த ஆறு நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மடானி அரசாங்கத்தின் பிம்பத்தை சேதப்படுத்தும் விஷயங்களால் தன்னைத் தாக்க முயற்சித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஷம்சுல் இஸ்கந்தர் கூறினார்.

எனவே, இந்தத் தாக்குதலில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

பிரதமர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று அவர் அப்பதிவில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset