செய்திகள் இந்தியா
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
டெல்லி:
டெல்லியில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது.
தில்லியில் காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் உள்ளது. மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் காற்று மாசுக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தில்லியில் இந்தியா கேட் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
அப்போது அங்குள்ள சாலையை சுத்தம் செய்ய முயன்ற ஊழியர்கள் மீது சிலர் 'பெப்பர் ஸ்ப்ரே'வை அடித்ததாகக் கூறப்படுகிறது. சிலர் காவல்துறையினர் மீதும் பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட பலமுறை கோரிக்கை விடுத்தும் போராட்டக்காரர்கள் நகர மறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் பெப்பர் ஸ்பிரே கொண்டு தாக்கியதில் சில காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் எட்டு பேருக்கு பங்கு வைத்த கணவன் கைது
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 2:40 pm
100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணம்
November 16, 2025, 10:54 am
