செய்திகள் மலேசியா
நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்: அசாம் பாக்கி
புத்ராஜெயா:
நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.
அதிகாரிகளால் தேடப்படும் செகாம்புட் பிரிவு பெர்சத்து துணைத் தலைவர் அடாம் ரட்லான் ஆடம் முஹம்மது, நீதிமன்றத்தால் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.
மேலும் நீதிமன்றத்தின் தண்டனைக்குப் பிறகு அடாம் ரட்லான் வெளிநாடு செல்ல சுதந்திரமாக இருப்பதாக அவர் கூறினார்.
இருப்பினும் அடாம் ரட்லான் எங்கு செல்கிறார் என்பதை இதுவரை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஜான விபாவா திட்டம் தொடர்பாக அவர் முன்பு விசாரிக்கப்பட்டார்.
நீதிமன்றம் அவருக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
அவரின் கடப்பிதழின் நிலை குறித்து குடிவரவுத் துறையுடன் எம்ஏசிசி விவாதங்களை நடத்தியதாக டான்ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 2:58 pm
சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது
November 20, 2025, 1:47 pm
2025 ஹஜ் யாத்திரையை தங்கள் நிதி நெருக்கடி காரணமாக 50 சதவீத யாத்ரீகர்கள் நிராகரித்துள்ளனர்: அமைச்சர் நயீம்
November 20, 2025, 10:03 am
மலேசியா, எத்தியோப்பியா இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்
November 20, 2025, 10:02 am
வெள்ள நீர் மோதியதால் பாலம் இடிந்து விழுந்தது: 3,000 பூர்வக்குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது
November 20, 2025, 10:00 am
சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
November 19, 2025, 10:21 pm
சர்க்கரை சேர்க்காத நாளை இந்திய முஸ்லிம் உணவகங்கள் அறிமுகப்படுத்தும்: பிரெஸ்மா
November 19, 2025, 10:19 pm
சபா தேர்தலுக்குப் பிறகு மஇகா பிரச்சினைகள் குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் விவாதிக்கும்: ஜம்ரி
November 19, 2025, 6:17 pm
