செய்திகள் மலேசியா
மீபாவின் 12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்து போட்டி; 450 மாணவர்கள் பங்கேற்பு: அன்பானந்தன்
கோலாலம்பூர்:
மீபாவின் 12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்து போட்டியில் 450 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மீபாவின் தலைவர் அன்பானந்தன் இதனை கூறினார்.
மீபா எனப்படும் மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டி சிரம்பான் பண்டார் செண்டாயான் ஐஆர்சி அரங்கில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
மலேசியா முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு இந்த போட்டி மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்.
ஆண்டுதோறும் மீபா ஏற்பாட்டில் நடக்கும் இந்த போட்டி இந்திய இளைஞர்களிடையே கால்பந்தை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவிலான இந்த போட்டியில் 12 மாநிலங்களில் இருந்து தமிழ்ப் பள்ளி குழுக்கள் பங்கேற்கிறது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகள், ஆர்வம் மற்றும் உறுதியை ஒரு தேசிய அரங்கில் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
போட்டிக்கு அப்பால், இந்த போட்டி ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூக வளர்ச்சியின் கூட்டு உணர்வின் கொண்டாட்டமாக செயல்படுகிறது
12 வயதுக்குட்பட்ட பிரிவில் 450க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதை காண நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.
மேலும் 6 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியிடும் 70 இளம் விளையாட்டாளர்களின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவதற்கான மீபாவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
தமிழ்ப் பள்ளிகளுக்கான மாநில கால்பந்து சங்கங்கள்ஒத்துழைப்பை மேம்படுத்தும வகையில் மீபா துணைத் தலைவர் ராஜேந்திரன், போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவின் அயராத முயற்சிகளை நான் பாராட்ட விரும்புகிறேன்.
அவர்களின் அர்ப்பணிப்பு மீபா குறிக்கும் ஒற்றுமை, குழுப்பணியைப் பிரதிபலிக்கிறது.
விளையாட்டு மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான எங்கள் நோக்கத்தில் எம்ஐஇடி இரண்டாவது ஆண்டாக மீண்டும் ஒரு ஆதரவாளராக வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
இந்த தருணத்தில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் தொடர்ச்சியான ஊக்கம், ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அன்பானந்தன் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 2:58 pm
சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது
November 20, 2025, 1:48 pm
நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்: அசாம் பாக்கி
November 20, 2025, 1:47 pm
2025 ஹஜ் யாத்திரையை தங்கள் நிதி நெருக்கடி காரணமாக 50 சதவீத யாத்ரீகர்கள் நிராகரித்துள்ளனர்: அமைச்சர் நயீம்
November 20, 2025, 10:03 am
மலேசியா, எத்தியோப்பியா இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்
November 20, 2025, 10:02 am
வெள்ள நீர் மோதியதால் பாலம் இடிந்து விழுந்தது: 3,000 பூர்வக்குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது
November 20, 2025, 10:00 am
சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
November 19, 2025, 10:21 pm
சர்க்கரை சேர்க்காத நாளை இந்திய முஸ்லிம் உணவகங்கள் அறிமுகப்படுத்தும்: பிரெஸ்மா
November 19, 2025, 10:19 pm
