செய்திகள் மலேசியா
மஇகாவின் பேராளர் மாநாட்டில் 4 மூத்த தலைவர்களுக்கு சிறந்த சேவையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
ஷாஆலம்:
மஇகாவின் பேராளர் மாநாட்டில் 4 மூத்த தலைவர்களுக்கு சிறந்து சேவையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவை இன்று ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் முக்கிய அங்கமாக மஇகாவின் நான்கு மூத்த தலைவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் சேவை, அர்பணிப்புக்கான மஇகாவின் தோற்றுநர் ஜோன் தீவி விருது டான்ஸ்ரீ குமரனுக்கு வழங்கப்பட்டது.
சேவை, வருங்கால தலைமைத்துவத்திற்கான துன் வீதி சம்பந்தன் விருது டான்ஸ்ரீ பேராசிரியர் மாரிமுத்துவுக்கு வழங்கப்பட்டது.
டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் தேச கட்டுமான விருது டத்தோ கேஎஸ் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
உச்சக்கட்டமான துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருது டத்தோ எம். செல்லதேவனுக்கு வழங்கப்பட்டது.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2025, 11:02 pm
மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்
November 16, 2025, 9:57 pm
மஇகா இன்று முடிவெடுக்காததற்கு அமைச்சரவை மாற்றமும், சபா தேர்தலும் காரணமா?: கட்சி வட்டாரம்
November 16, 2025, 8:08 pm
நாடு முழுவதும் கனமழை மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் அபாயம்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 16, 2025, 6:45 pm
பேராக் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முருகன் மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்றது மிகச் சிறப்பு: டத்தோ சிவநேசன்
November 16, 2025, 3:47 pm
புளூ வாட்டர் தோட்டத்தில் இந்திய பெண் கொலை வழக்கில் நாளை இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்படும்
November 16, 2025, 2:28 pm
