செய்திகள் மலேசியா
மஇகா இன்று முடிவெடுக்காததற்கு அமைச்சரவை மாற்றமும், சபா தேர்தலும் காரணமா?: கட்சி வட்டாரம்
ஷாஆலம்:
எதிர்காலம் குறித்து மஇகா இன்று தெளிவான முடிவெடுக்காததற்கு அமைச்சரவை மாற்றமும், சபா தேர்தலும் காரணமாக இருக்கலாம் என விஷயமறிந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
மஇகாவின் 79ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று நடைபெற்றது.
தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேறி தேசியக் கூட்டணியில் இணையும் என்று அரசியல் விமர்சகர்களாலும் தொண்டர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கான முடிவு இன்றைய பேராளர் மாநாட்டில் எடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் பரபரப்பான சூழ்நிலையில் இன்றைய மாநாடு நடைபெற்றது.
ஆனால் இறுதியில் மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை பேராளர்கள் மஇகா தலைவருக்கும் மத்திய செயலவைக்கும் வழங்கினர்.
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமரை சந்தித்தேன். மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது குறித்து அவரிடம் விளக்கமாக கூறினேன்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் என்னிடம் வலியுறுத்தினார்.
இதில் உச்சக்கட்டமாக தேசிய முன்னணியை விட்டு வெளியேறினாலும் மஇகா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை ஆதரிக்கும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியாக கூறினார்.
அதன் அடிப்படையில் தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேறுவது குறித்து முடிவு எடுக்காததற்கு பிரதமரின் தலையீடு ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் சபா மாநில தேர்தல் வரும் நவம்பர் அன்று 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குறிப்பாக விரைவில் அமைச்சரவையும் மாற்றம் காணும் எனும் கூறப்படுகிறது. இப்போதாவது ஆட்சியில் முக்கிய பங்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுபோன்ற விவகாரங்களும் மஇகாவின் இன்றைய நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2025, 11:02 pm
மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்
November 16, 2025, 8:08 pm
நாடு முழுவதும் கனமழை மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் அபாயம்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 16, 2025, 6:45 pm
பேராக் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முருகன் மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்றது மிகச் சிறப்பு: டத்தோ சிவநேசன்
November 16, 2025, 3:47 pm
புளூ வாட்டர் தோட்டத்தில் இந்திய பெண் கொலை வழக்கில் நாளை இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்படும்
November 16, 2025, 2:28 pm
