செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியை விட்டு வெளியேறினாலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தலைமையை மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
தேசிய முன்னணியை விட்டு வெளியேறினாலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தலைமையை மஇகா ஆதரிக்கும்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
தேசிய முன்னணியை விட்டு மஇகா வெளியேறுவது குறித்து மஇகா மத்திய செயலவை முடிவு செய்யும் என பேராளர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
ஆக பேராளர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மஇகாவின் மத்திய செயற்குழு ஆய்வு செய்யும்.
கட்சியின் எதிர்கால திசையை முடிவு செய்யும் அதிகாரத்தை பிரதிநிதிகள் தனக்கும், மத்திய செயலவை குழுவிற்கும் வழங்கியுள்ளது.
கட்சி பின்னர் எடுக்கும் எந்த அரசியல் முடிவுகளையும் பொருட்படுத்தாமல்,
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையை ஆதரிப்பதில் மஇகா முழுமையாக உறுதியாக உள்ளது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் இன்னும் உறுதியாக இருக்கிறோம்.
எங்கள் வார்த்தையைக் காப்பாற்றுகிறோம். நாங்கள் வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கப்படவில்லை.
ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பிரதமருக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று உறுதியாகக் கூறி வருகிறோம், அது தொடரும்.
மஇகா மாநாடு முடித்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2025, 11:02 pm
மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்
November 16, 2025, 9:57 pm
மஇகா இன்று முடிவெடுக்காததற்கு அமைச்சரவை மாற்றமும், சபா தேர்தலும் காரணமா?: கட்சி வட்டாரம்
November 16, 2025, 8:08 pm
நாடு முழுவதும் கனமழை மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் அபாயம்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 16, 2025, 6:45 pm
பேராக் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முருகன் மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்றது மிகச் சிறப்பு: டத்தோ சிவநேசன்
November 16, 2025, 3:47 pm
புளூ வாட்டர் தோட்டத்தில் இந்திய பெண் கொலை வழக்கில் நாளை இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்படும்
November 16, 2025, 2:28 pm
