செய்திகள் மலேசியா
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
ஜொகூர்பாரு:
ஆர்டிஎஸ் இயங்கும்போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
ஜொகூர் மாநில இடைக்கால துங்கு இஸ்மாயில் இதனை கூறினார்.
ஜொகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்டிஎஸ்) இணைப்புத் திட்டம் விரைவில் செயல்படத் தொடங்கும்.
இது தொடங்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கவலையளிக்கும் வகையில் இருக்கும்.
இருவரை புக்கிட் சாகரைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு உயர்த்தப்பட்ட தானியங்கி போக்குவரத்து அமைப்பு அல்லது பிற போக்குவரத்து மாற்றுகளை செயல்படுத்துவது உட்பட, போக்குவரத்து அளவு அதிகரிப்பை ஈடுசெய்ய எந்தவொரு விரிவான தீர்வும் வழங்கப்படவில்லை.
முழுமையாக பல நிலை தீர்வு செயல்படுத்தப்பட்டால் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட போதுமான ஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இருப்பினும், பினாங்கு ஏஆர்டி அமைப்பை விட மிகவும் விலை உயர்ந்த எல்ஆர்டி திட்டத்தைப் பெற முடிகிறது.
பாசிர் கூடாங் மருத்துவமனை தாமதமாக நிறைவடைந்தது.
சுல்தானா அமினா மருத்துவமனையில் உள்ள சிக்கல்கள், அத்துடன் சுல்தானா அமினா 2 மருத்துவமனை திட்டத்தில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட ஜொகூர் மாநிலத்தில் பல முக்கிய சுகாதாரத் திட்டங்களின் முன்னேற்றத்தையும் நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 12:19 pm
மஇகா இப்போது தேசியக் கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளது: தக்கியூடின்
March 17, 2026, 12:18 pm
ஈப்போ மாநகரில் தமிழ் திரைப்படம் தயாராகிறது
March 17, 2026, 12:17 pm
ஓய்வுபெற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு வகுப்பு E உரிமம்: அரசு சிறப்பு திட்டம்
March 17, 2026, 12:17 pm
கோலாலம்பூர் வணிகக் களத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மாற்றியமைக்கிறது
March 17, 2026, 11:25 am
வன்முறையும் அரசியல் மோதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என மலேசியா தொடர்ந்து வலியுறுத்தும்: அன்வார்
March 17, 2026, 11:24 am
நோன்பு மாதத்தில் பள்ளிவாசல் முன்பு கைகலப்பு: ஒன்பது பேரைப் போலிசார் கைது செய்தனர்
March 17, 2026, 11:23 am
வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தலுக்கு அமைச்சரவையின் தீர்மானம் அவசியம்: கல்வித் துறை
March 17, 2026, 11:19 am
