நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அருண் துரைசாமி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

ஜாவி:

சமூக ஆர்வலர் அருண் துரைசாமி  தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

56 வயதான அவர் நிபோங் திபாலில் உள்ள ஜாவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டின் பேரில் தன்னை விசாரிக்கக் கோரினார்.

அவர் மீதான குற்றச்சாட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது தொடர்பானது.

பிரதமரின் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் எம். குலசேகரன், பினாங்கில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அருணை வழக்கறிஞர்கள் டி. குணசீலன், பல்வந்த் சிங் பூர்பா,  டிக்சன் எங் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மேலும் மாஜிஸ்திரேட் நூருல் ஐனா அகமது ஒருவர் உத்தரவாதத்துடன் 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அருண் பெற்றார்.

இந்த ஜாமீன் தொகையை துணை அரசு வழக்கறிஞர்கள் நஸ்ரான் ஷாம்,  ஐரினா ஷாஸ்ரீன் ஜைனுரின் ஆகியோர் முன்மொழிந்தனர்.

பின்னர், ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஜூன் 22 ஆம் தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset