செய்திகள் மலேசியா
7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது
சிப்பாங்:
கிட்டத்தட்ட 7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கேஎல்ஐஏ முனையம் 2இல் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் ஒரு சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
கைதான ஆடவரிடம் இருந்து 6,884 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 344,000 ரிங்கிட் ஆகும்.
அமலாக்கப் பிரிவு உறுப்பினர்கள், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு துறை ஆகியோரின் குழுவால் இந்த கடத்தல் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் துறை இயக்குநர் சுல்கிஃப்லி முஹம்மது தெரிவித்தார்.
நாட்டிற்குள் நுழைய முயன்ற சந்தேக நபர் அவர் எடுத்துச் சென்ற பொருட்களை ஸ்கேன் செய்ததில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சோதனையின் விளைவாக, கெட்டமைன் என சந்தேகிக்கப்படும் தூள் கொண்ட பல சிறிய வெளிப்படையான பிளாஸ்டிக் பொட்டலங்களை உறுப்பினர்கள் கண்டுபிடித்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 9, 2025, 4:23 pm
மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது: ஃபட்லினா சிடேக் உறுதி
December 9, 2025, 11:15 am
மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர், SIMS KL , MMYC இணைந்து காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஒப்படைப்பு
December 9, 2025, 10:47 am
போலிஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்திற்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
December 8, 2025, 8:02 pm
பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயம்
December 8, 2025, 7:59 pm
