செய்திகள் மலேசியா
7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது
சிப்பாங்:
கிட்டத்தட்ட 7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கேஎல்ஐஏ முனையம் 2இல் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் ஒரு சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
கைதான ஆடவரிடம் இருந்து 6,884 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 344,000 ரிங்கிட் ஆகும்.
அமலாக்கப் பிரிவு உறுப்பினர்கள், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு துறை ஆகியோரின் குழுவால் இந்த கடத்தல் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் துறை இயக்குநர் சுல்கிஃப்லி முஹம்மது தெரிவித்தார்.
நாட்டிற்குள் நுழைய முயன்ற சந்தேக நபர் அவர் எடுத்துச் சென்ற பொருட்களை ஸ்கேன் செய்ததில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சோதனையின் விளைவாக, கெட்டமைன் என சந்தேகிக்கப்படும் தூள் கொண்ட பல சிறிய வெளிப்படையான பிளாஸ்டிக் பொட்டலங்களை உறுப்பினர்கள் கண்டுபிடித்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 9:14 am
ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் RM 69,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: நால்வர் கைது
December 7, 2025, 8:46 am
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் ஆடியோ புக்கிட் அமானில் ஒப்படைப்பு
December 6, 2025, 5:17 pm
பேராக் ம இ கா கல்வி நிதியுதவியாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி
December 5, 2025, 8:56 am
புங் மொக்தார் காலமானார்
December 4, 2025, 12:18 pm
திருவள்ளுவர் சிலை விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்க வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
December 3, 2025, 9:29 am
சம்சுல் ஹாரிஸ் மரணத்திற்கு காரணமான நபரை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்: டத்தோ குமார்
December 2, 2025, 1:09 pm
