செய்திகள் மலேசியா
7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது
சிப்பாங்:
கிட்டத்தட்ட 7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கேஎல்ஐஏ முனையம் 2இல் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் ஒரு சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
கைதான ஆடவரிடம் இருந்து 6,884 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 344,000 ரிங்கிட் ஆகும்.
அமலாக்கப் பிரிவு உறுப்பினர்கள், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு துறை ஆகியோரின் குழுவால் இந்த கடத்தல் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் துறை இயக்குநர் சுல்கிஃப்லி முஹம்மது தெரிவித்தார்.
நாட்டிற்குள் நுழைய முயன்ற சந்தேக நபர் அவர் எடுத்துச் சென்ற பொருட்களை ஸ்கேன் செய்ததில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சோதனையின் விளைவாக, கெட்டமைன் என சந்தேகிக்கப்படும் தூள் கொண்ட பல சிறிய வெளிப்படையான பிளாஸ்டிக் பொட்டலங்களை உறுப்பினர்கள் கண்டுபிடித்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:21 pm
மாடானி அரசு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகளை விரைவில் தெரிவிக்கும்
March 9, 2026, 6:19 pm
சபாவில் நாளை முதல் தொடர்ச்சியான மழை பெய்யும்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
