செய்திகள் உலகம்
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
பேங்காக்:
கம்போடியாவுடன் செய்யப்பட்ட அமைதி உடன்பாட்டை ரத்து செய்வதாகத் தாய்லாந்து அறிவித்துள்ளது.
இரு நாடுகளிடையே உள்ள எல்லைப் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் இரு தாய்லந்து ராணுவ வீரர்கள் மாண்டனர். அதைத் தொடர்ந்து தாய்லந்து அவ்வாறு தெரிவித்தது.
மலேசியப் பிரதமர் அன்வாரின் பெருமுயற்சியில்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தலைமையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாடு இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பப்பட்டது.
திட்டமிட்டபடி சண்டைநிறுத்தம் நிலைத்திருந்தால் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டிருப்பர்.
தேசியப் பாதுகாப்பு அபாயங்கள் குறைந்துவிட்டன என்று தவறாக எண்ணியதாகத் தாய்லந்துப் பிரதமர் அனுட்டின் சான்விராகுன் (Anutin Charnvirakul) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமைதி உடன்பாடு ரத்து செய்யப்பட்டதைப் பற்றிக் கம்போடிய அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை.
இதற்கு முன்னர் கம்போடியா அதன் எல்லைப்பகுதியில் கண்ணிவெடி வைத்ததாகத் தாய்லந்து குற்றஞ்சாட்டியிருக்கிறது.
அவற்றைக் கம்போடியா நிராகரித்துள்ளது.
அமைதியை நிலைநாட்ட கம்போடிய உறுதியாய் இருப்பதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு கூறியது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
