செய்திகள் இந்தியா
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
புதுடெல்லி:
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில், அங்கு உச்சகட்ட பாதுகாப்பு காரணமாக பதற்றம் நீடிக்கிறது.
டெல்லியில் பாதுகாப்பு பலமாக உள்ள பகுதிகளில் ஒன்று செங்கோட்டை. இந்தப் பகுதிக்கு உள்ளூர் மக்கள், சுற்றுலாவாசிகள் உட்பட பலர் வந்து செல்வது வழக்கம்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இது. இந்தச் சூழலில் இன்று (நவ.10) மாலை 6.30 மணி அளவில் அந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் ‘கேட் 1’ நுழைவாயில் பகுதியில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
அப்போது வெடிச் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் அங்காடிகளும் அதிகம் நிறைந்துள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர், காவல் துறைக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் அந்தப் பகுதியில் தீயை அணைத்தனர்.
காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
