செய்திகள் உலகம்
அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது
வாஷிங்டன்:
அமெரிக்க அரசாங்க முடக்கம் 39-ஆவது நாளாகத் தொடர்கிறது. இதுவரை அமெரிக்க நாடு சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை இது.
அமெரிக்க அரசாங்கம் முடங்கியிருப்பதால் ஊழியர்கள் சம்பளமின்றி வேலை செய்யவேண்டிய நிலை.
அவர்களில் சிலர் உடல்நலமில்லை என்று விடுப்பு எடுப்பதுடன், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கத் தற்காலிக வேலைகளில் சேர்ந்துள்ளனர்.
ஆள்பற்றாக்குறையைச் சமாளிக்க 40 விமான நிலையங்களில் சேவைகள் குறைக்கப்படுமென நேற்று முதல் முறை அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு நடப்புக்கு வந்தபோது 5,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்தாயின அல்லது தாமதம் அடைந்தன.
குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிப்பதால் அரசாங்க முடக்கம் தொடர்கிறது.
மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் சுகாதார காப்புறுதிக் கட்டணம் தொடர்ந்து மலிவாகவே இருக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது.
Medicaid திட்டத்துக்கு அரசாங்க நிதியைக் குறைக்கக் கூடாது என்பதும் ஜனநாயகக் கட்சியின் விருப்பம்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அரசாங்க முடக்கநிலைக்கு ஜனநாயகக் கட்சியினரே காரணமென குறைகூறுகிறார்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
