நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிலாங்கூர் அணி நிர்வாகம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ரசிகர்கள்

பெட்டாலிங் ஜெயா:

சிலாங்கூர் அணி நிர்வாகம் மீதான அதிருப்தியை நேற்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர்.

எம்பிபிஜே கால்பந்து அரங்கில் ஆசிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் சிலாங்கூர் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் பெர்சிப் பண்டோங் அணியிடம் தோல்வி கண்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த ஆயிரக்கணக்கான சிலாங்கூர் ரசிகர்கள் அரங்கின் பிரதான வாயிலுக்கு முன்னால் கூடினர்.

அப்போது ரசிகர்கள் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜோஹன் கமல் ஹமிடன், உயர் நிர்வாகத்தின் பல பெயர்களை முழக்கமிட்டனர்.

மேலும் ஜோஹனைத் தேடி பல ஆதரவாளர்கள் அரங்கில் இருக்கையின் முக்கிய பகுதியை உடைத்து விஐபி அறைக்குள் நுழைய முயன்றதாக அறியப்படுகிறது.

நிர்வாகத்திற்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக ஆதரவாளர்கள் அரங்கின் வெளியேறும் இடத்தைத் தடுக்க முயற்சிப்பதையும் காண முடிந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset