நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: மலேசியா தோல்வி

கோலாலம்பூர்: 

மலேசிய பூப்பந்து ஆண் இரட்டையர் அணியின் வீரர்களான ஆரன் சியா, சோ வூய் யிக், இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளனர். 19 ஆண்டுகளாக ஆண்கள் பூப்பந்து இரட்டையர் அணி போட்டியில் மலேசியா வெற்றியை தொடங்க முடியவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

உலகின் இரண்டாம் இடம் பெற்ற இவர்கள், தென் கொரியா, கிம் வோன் ஹோ–சியோ சியுங்-ஜே மூலம் 18-21, 21-12, 21-19 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தனர்.

இந்த தோல்வியின் மூலம், உலகின் பூப்பந்து போட்டியில் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வெல்லும் மலேசியாவின் பல ஆண்டு கனவை உண்மையாக்கும் வாய்ப்பை ஆரனும், வூய் யிக்கும் இழந்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset