செய்திகள் மலேசியா
பாஸ்டர் கோ, அம்ரி வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏஜிசி மேல்முறையீடு செய்யும்
கோலாலம்பூர்:
சமூக ஆர்வலர் அம்ரி சே மாட், பாஸ்டர் ரேமண்ட் கோ ஆகியோரின் வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மேல்முறையீடு செய்யும்.
இரண்டு தனித்தனி அறிக்கைகளில், இரண்டு நபர்களின் காணாமல் போனதற்கு அரசாங்கமும் போலிஸ்படையும் பொறுப்பேற்ற முடிவுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அறிவிப்பை தாக்கல் செய்வதாக ஏஜிசி அறிவித்துள்ளது.
நேற்று, நீதிபதி சு தியாங் ஜூ, அம்ரி காணாமல் போனதற்கு போலிஸ் துறையும் அரசாங்கமும் நேரடியாகப் பொறுப்பு என்று தீர்ப்பளித்தார்.
மேலும் அவரது மனைவி நோர்ஹயாதி அரிஃபினுக்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பை வழங்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.
மேலும் பொது இழப்பீடுகளாக 2 மில்லியன் ரிங்கிட்டையும் முன்மாதிரியான இழப்பீடுகளாக 1 மில்லியன் ரிங்கிட்டை வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 12:53 pm
சபா தேர்தலில் கெஅடிலான் கட்சியின் பிரச்சாரங்கள் திறம்பட மேற்கொள்ளப்படும்: டாக்டர் சத்யா பிரகாஷ்
November 7, 2025, 12:29 pm
பிரஸ்மா புதிய தலைவர் டத்தோ மொஹ்சினுக்கு பாராட்டு விழா
November 7, 2025, 11:19 am
சபா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையே தொகுதி மோதல் இல்லை: ஹசான்
November 7, 2025, 11:14 am
உப்சி மாணவர்கள் விபத்து: உரிம நிபந்தனைகளை நிறுவனம் பின்பற்றத் தவறியதால் 20,000 ரிங்கிட் அபராதம்
November 6, 2025, 12:17 pm
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
November 6, 2025, 11:50 am
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 11:09 am
