செய்திகள் மலேசியா
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிச் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கடத்தலில் பாதிரியார் ரேமண்ட் கோவின் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குடும்பத்தினருக்கு சுமார் 31 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கும் போலிஸ்க்கும் உத்தரவிட்டுள்ளது.
2017 பிப்ரவரி 13ஆம் தேதி அன்று அவர் காணாமல் போனதிலிருந்து காவல்துறை அவர் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தும் வரை ஒரு நாளைக்கு 10,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி டத்தோ சு தியாங் ஜூ அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார்.
ஜாலான் எஸ்எஸ்4பி/10, பெட்டாலிங் ஜெயாவில் வாகனம் ஓட்டிச் சென்றபோது ரேமண்ட் கடத்தப்பட்டார்.
இன்று வரை அவர் காணாமல் போய் 3,188 நாட்கள் ஆகிறது.
முன்னாள் போலிஸ் அதிகாரிகள் உட்பட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் ரேமண்டின் கடத்தலில் ஈடுபட்டதாகவும், ஒரே அறிவுறுத்தலின் கீழ் செயல்பட்டதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் வழக்கு தொடுப்பவருக்கு 250,000 ரிங்கிட் செலவுகளை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 12:17 pm
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 11:09 am
எப்ஏஎம் தொடர்பான வழக்கு செலவுகளுக்கு நான் பொறுப்பு; மக்களின் பணம் அல்ல: துங்கு இஸ்மாயில்
November 6, 2025, 10:22 am
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்
November 6, 2025, 10:17 am
மொஹைதின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்: ஹம்சா
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
