நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தலில் கெஅடிலான் கட்சியின் பிரச்சாரங்கள் திறம்பட மேற்கொள்ளப்படும்: டாக்டர் சத்யா பிரகாஷ்

 கோத்தா கினபாலு:

சபா மாநிலத் தேர்தலில் கெஅடிலான் கட்சியின் பிரச்சாரங்கள் திறம்பட மேற்கொள்ளப்படும்.

கெஅடிலான் கட்சியின் பிரச்சார குழுவின் உயர் மட்ட தலைவரும், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கூறினார்.

சபா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கெஅடிலான் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை திறக்கப்பட்டுள்ளது.

தற்போது சபாவில் களம் இறங்கி இந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கை டாக்டர் சத்தியபிரகாஷ்  இந்த அறையை பார்வையிட்டார்.

சிலாங்கூர் தேர்தல் குழுவின் உயர்மட்ட குழுவின்  துணை இயக்குநர் சுரேஸ், துணை இயக்குநர் ஹனாஃபி ஆகியோர், சபாவின் கோத்தா கினாபாலுவில் உள்ள ஜேபிஆர்என் சிலாங்கூர் குழுவுடன் சேர்ந்து, சபா மாநிலத் தேர்தலுக்கான மக்கள் நீதிக் கட்சியின் பிரதான இயக்க அறையை பார்வையிட்டனர்.

மேலும் ராஃபருடன் முக்கிய ஆலோசனையும் நடைபெற்றது.
சபா மண்ணில் தேர்தல் பிரச்சார பணி நம்பிக்கையுடனும் திறம்படவும் தொடர்ந்து நகர்வதை உறுதிசெய்ய ஒவ்வொரு உத்தியும் செம்மைப் படுத்தப்பட்டதாக டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, கலைமகள் உட்பட பலரும் இப்போது சபாவில் இருக்கிறார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset