செய்திகள் மலேசியா
சத்குருநாதர் தவத்திரு சித்ரமுத்து அடிகளாரின் 125ஆவது ஜெயந்தி விழா; நவம்பர் 15ஆம் தேதி ஈப்போவில் நடைபெறும்: குணராஜ்
கோலாலம்பூர்:
சத்குருநாதர் தவத்திரு சித்ரமுத்து அடிகளாரின் 125ஆவது ஜெயந்தி விழா நவம்பர் 15ஆம் தேதி ஈப்போவில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் ஆலோசகரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் இதனை கூறினார்.
சத்குருநாதர் தவத்திரு சித்ரமுத்து அடிகளார், தாப்பாவிலுல்ல ஜீவ சமாதி கொண்டுள்ள தமது குருவான சத்குரு ஸ்ரீ ஜெகநாதர் சுவாமியிடம் சீடராக உபதேசம் பெற்றவர்.
பிறகு 1952ஆண்டில் அருளொளி மார்க்கத்தை மலேசியாவில் ஸ்தாபித்தார்.
அடிகளார் மலேசிய திரு நாட்டில் பல தற்காலத்தில் பிரபலமான ஆலயங்களில் தவம் மேற்க் கொண்டு, அந்த ஆலயங்களுக்குச் பாடலும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1995ஆம் ஆண்டு சத்குரு நாதர் தவத்திரு சித்ரமுத்து அடிகளார் பனைக்குலத்தில் ஜுவ சமாதி அடைந்தார்.
இந்நிலையில் இவ்வாண்டு சத்குருநாதரின் 125ஆவது ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில் எதிர்வரும் 15 நவம்பர் 2025, சனிக்கிழமை, காலை மணி 8.00க்கு மலேசிய அருளொளி மன்றம், ஜாலான் வாயாங், புந்தோங், ஈப்போவில் நடைப்பெற உள்ளது.
இவ்விழாவிற்கு தவத்திரு சுவாமி கோவிந்தன், சிவஸ்ரீ அ.ப.முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்களின் சிறப்புரையோடு மற்ற நிகழ்வுகளும் நடக்க உள்ளது.
ஆக இவ்விழாவில் அருளொளி நன்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவினை மிகச் சிறப்பாக நடத்த எத்தனையுத்துள்ளார்கள்.
இது ஒரு மிக சிறந்த ஒன்று கூடல் நிகழ்வாகும்.
குருவருள் ஆசிப் பெற்று உய்ய மலேசியாவில் உள்ள அனைத்து அருளொளி நன்மக்களையும் ஏற்பாடுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 4:12 pm
சூடானில் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர்
November 3, 2025, 2:36 pm
அக்டோபர் 31 வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்
November 3, 2025, 2:35 pm
1,000 ஆலயங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய மடானி அரசாங்கத்திற்கு பாராட்டு: குணராஜ்
November 3, 2025, 2:34 pm
மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இருக்காது: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 3, 2025, 1:11 pm
இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பூடி 95 வழிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: துணையமைச்சர்
November 3, 2025, 1:10 pm
பிளேக் பெந்தர் கிண்ண கால்பந்து போட்டி: 16 குழுக்கள் பங்கேற்பு
November 3, 2025, 1:06 pm
சிலம்பக் கலைக்கு முக்கிய பங்காற்றிய டத்தோ மகாகுரு சிவாவுக்கு தங்க நிற பட்டையம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
November 3, 2025, 1:04 pm
