செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் இருந்து 4,343 பேர் வருகை: மலேசியாவில் இருந்து சென்றவர்கள் 2,771 பேர்
ஜோகூர்:
தரைவழி தடுப்பூசி பயணத்தடத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் சிங்கப்பூரில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மலேசியா வந்தடைந்துள்ளனர்.
இதைவிட மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றவர்களின் எண்ணிக்கை குறைவு எனத் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் மலேசியா, சிங்கப்பூர் இடையேயான பயணத்துக்கு ஏதுவாக வான் மற்றும் தரைவழி எல்லைகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து ஏராளமானோர் பிரிந்திருக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களைக் காண எல்லைகளைக் கடக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரையிலான நிலவரப்படி சிங்கப்பூரில் இருந்து தரைவழி 4,343 பேர் எல்லை கடந்து மலேசியாவுக்குள் வந்துள்ளர்.
இரு தரப்புக்கும் இடையேயான பயணத்தடத் திட்ட ஒப்பந்தத்தின்கீழ் தினந்தோறும் மொத்தம் 2,880 பேர் தரைவழி மலேசியா - சிங்கப்பூர் இடையே எல்லை கடக்க அனுமதிக்கப்படுவர்.
அந்த வகையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 4,343 என்பது சுமார் 60 விழுக்காடு ஆகும். இதேபோல் பயணத்தடத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் இருந்து 2,771 பேர் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
தொற்றுப் பாதிப்புக்கு முன்பு நாள்தோறும் சுமார் மூன்று லட்சம் மலேசியர்கள் சிங்கப்பூர் சென்று திரும்புவர்.
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 1:43 pm
தெக்குன் திட்டங்கள் இந்திய தொழில் முனைவர்களை முழுமையாக சென்றடைய வேண்டும்: மோகன் ராஜ், சரஸ்வதி
March 15, 2026, 12:34 pm
மெரிடிம் மேம்பாடு திட்டம்: கடல் கண்காணிப்பு திறன் 70% உயர்வு
March 15, 2026, 12:31 pm
“உணவு பாதுகாப்பு சிக்கலுக்கு தனிப்பட்ட தோட்டம் தீர்வல்ல”: டத்தோ வான் சைபுல் விளக்கம்
March 15, 2026, 12:22 pm
ஸ்தாப்பாக்கில் அதிகாலை கொள்ளை: ஆயுதத்துடன் வந்த இருவர் பணம் பறிப்பு
March 15, 2026, 11:37 am
நாடெங்கும் உள்ள பி40 பிரிவினருக்கு 16,500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம்: டத்தோஶ்ரீ ரமணன்
March 15, 2026, 10:56 am
டிரெய்லர், மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் 12 பேர் பாதிப்பு; 9 கி.மீ வரை போக்குவரத்து நெரிசல்
March 15, 2026, 10:38 am
மூடா கட்சியின் புதிய தலைவராக அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் பொறுப்பேற்பு
March 15, 2026, 10:23 am
