
செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் இருந்து 4,343 பேர் வருகை: மலேசியாவில் இருந்து சென்றவர்கள் 2,771 பேர்
ஜோகூர்:
தரைவழி தடுப்பூசி பயணத்தடத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் சிங்கப்பூரில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மலேசியா வந்தடைந்துள்ளனர்.
இதைவிட மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றவர்களின் எண்ணிக்கை குறைவு எனத் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் மலேசியா, சிங்கப்பூர் இடையேயான பயணத்துக்கு ஏதுவாக வான் மற்றும் தரைவழி எல்லைகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து ஏராளமானோர் பிரிந்திருக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களைக் காண எல்லைகளைக் கடக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரையிலான நிலவரப்படி சிங்கப்பூரில் இருந்து தரைவழி 4,343 பேர் எல்லை கடந்து மலேசியாவுக்குள் வந்துள்ளர்.
இரு தரப்புக்கும் இடையேயான பயணத்தடத் திட்ட ஒப்பந்தத்தின்கீழ் தினந்தோறும் மொத்தம் 2,880 பேர் தரைவழி மலேசியா - சிங்கப்பூர் இடையே எல்லை கடக்க அனுமதிக்கப்படுவர்.
அந்த வகையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 4,343 என்பது சுமார் 60 விழுக்காடு ஆகும். இதேபோல் பயணத்தடத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் இருந்து 2,771 பேர் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
தொற்றுப் பாதிப்புக்கு முன்பு நாள்தோறும் சுமார் மூன்று லட்சம் மலேசியர்கள் சிங்கப்பூர் சென்று திரும்புவர்.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:41 pm
இஸ்மாயில் சப்ரி வழக்கு; சொத்து பறிமுதல், குற்றவியல் குற்றச்சாட்டுகள் இரண்டும் வெவ்வேறு அம்சங்களாகும்: ஏஜிசி
September 14, 2025, 10:39 pm
ஆபாச வீடியோ தொடர்பான மிரட்டல்களால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்: ஃபஹ்மி
September 14, 2025, 9:57 pm
பாஸ் இளைஞர் பிரிவு மாநாட்டில் மஇகா கலந்து கொள்ளாததற்கு பயம் காரணம் அல்ல: அர்விந்த்
September 14, 2025, 9:54 pm
சிலம்பம், கபடிப் போட்டிகள் சுக்மாவில் நிலை நிறுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 14, 2025, 5:04 pm
பாஸ் கட்சியின் அழைப்பை மஇகா நிராகரிக்கவில்லை: கேசவன்
September 14, 2025, 5:02 pm
தேசியக் கூட்டணியில் இணைவதற்கு மஇகா முதலில் விண்ணப்பிக்கட்டும்: எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை: புனிதன்
September 14, 2025, 3:28 pm
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
September 14, 2025, 3:26 pm