நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் ஜெயாவில் பெரும் தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் பாதிப்பு

செராஸ்: 

பலாக்கோங் அருகிலுள்ள தாமான் செராஸ் ஜெயா பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.

சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்பு துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஹமத் முக்லிஸ் முக்தார் தெரிவித்ததாவது, சம்பவம் குறித்து இரவு 9.24 மணிக்கு தகவல் கிடைத்ததாக கூறினார். 

அதனைத் தொடர்ந்து பண்டார் துண் ஹுசைன் ஒன் தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனங்களும் வீரர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று முழுமையாக எரிந்ததுடன், மற்றவை முறையே 50 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரையில் சேதமடைந்தன. தீ பரவாமல் இரவு 10.18 மணிக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தற்போது மூன்று தொழிற்சாலைகளில் தீ அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் சம்பவ இடத்தை கண்காணிக்க வான்காணி கருவி பிரிவும் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையில் பல தீயணைப்பு நிலையங்களும் தன்னார்வ தீயணைப்பு குழுவும் காவல்துறையும் இணைந்து செயல்பட்டன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset