செய்திகள் இந்தியா
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
மும்பை:
சவூதி அரேபியாவின் ஜித்தா (Jeddah) நகரிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத்துக்கு (Hyderabad) புறப்பட்ட Indigo விமானம் வெடிகுண்டு மிரட்டலால் மும்பையில் தரையிறக்கப்பட்டது.
நேற்று காலை அந்தச் சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்குத் தகவல் வந்தது.
அடையாளம் தெரியாத நபர் மின்னஞ்சல் வழி அந்தத் தகவலை அனுப்பியிருக்கிறார்.
"ஹைதராபாத்தில் Indigo-68 விமானத்தைத் தரையிறக்க வேண்டாம். விமானத்தில் இருக்கும் சிலர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்." என்று அந்த நபர் எச்சரித்தார்.
தகவலை அறிந்தவுடன் விமானம் காலை 8.12 மணிக்கு மும்பையின் சிவாஜி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டுகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விமானத்தை அலசி ஆராய்ந்தனர்.
வெடிகுண்டோ அது தொடர்பான எந்தப் பொருளோ கண்டுபிடிக்கப்படவில்லை.
எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதிசெய்த பிறகு விமானம் ஹைதராபாத்தை மாலை 4.10 மணிக்குச் சென்றடைந்தது.
பொய்யான தகவலைக் கொடுத்த நபர் தேடப்படுகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
