செய்திகள் இந்தியா
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
கோதாவரி:
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் மாண்டனர்.
ஸ்ரீகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் நேற்று காலை அசம்பாவிதம் நடந்தது.
ஏகாதசி நிகழ்வுக்காகக் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் கூடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டது.
காயமுற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நஸீர் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
மாண்டோரின் குடும்பத்தாருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
