செய்திகள் இந்தியா
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
கோதாவரி:
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் மாண்டனர்.
ஸ்ரீகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் நேற்று காலை அசம்பாவிதம் நடந்தது.
ஏகாதசி நிகழ்வுக்காகக் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் கூடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டது.
காயமுற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நஸீர் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
மாண்டோரின் குடும்பத்தாருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
