செய்திகள் இந்தியா
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
கோதாவரி:
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் மாண்டனர்.
ஸ்ரீகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் நேற்று காலை அசம்பாவிதம் நடந்தது.
ஏகாதசி நிகழ்வுக்காகக் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் கூடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டது.
காயமுற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நஸீர் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
மாண்டோரின் குடும்பத்தாருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
