செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் மேலும் ஒரு பயணிக்கு ஓமிக்ரான் தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூருக்கு வெளிநாட்டிலிருந்து வந்த மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் (Omicron) கிருமித் தொற்றியிருப்பதாக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அது குறித்து சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆடவர், இம்மாதம் முதல் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த 37 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி.
கடந்த வாரம் ஓமிக்ரான் வகை கிருமி அடையாளம் காணப்பட்ட இருவருடன் அதே விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஜோஹன்னஸ்பர்கிலிருந்து (Johannesburg) கடந்த மாதம் 29ஆம் தேதி புறப்பட்டபோது அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.
சிங்கப்பூர் வந்தவுடன் இருமுறை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலும் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியானது.
இருப்பினும் இம்மாதம் 4ஆம் தேதி ஆடவருக்குக் காய்ச்சலும் தொண்டை வலியும் ஏற்பட்டதால், அவர் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரான் கிருமி தொற்றியிருப்பது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட ஆடவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் ஆவார்.
அவருக்கு மிதமான அறிகுறிகளே இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர் சமூக அளவில் யாரிடமும் தொடர்பில் இல்லை என்றும் அது சொன்னது.
- CNA
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முஹம்மத் முய்சுவின் கட்சி அமோக வெற்றி
April 22, 2024, 10:12 am
இஸ்ரேல் தாக்குதலில் 18 குழந்தைகள் உயிரிழப்பு
April 21, 2024, 4:55 pm
டிரம்ப் ஆதரவாளர் தீயிட்டு தற்கொலை
April 21, 2024, 1:29 pm
துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை
April 21, 2024, 12:35 pm
அடுத்த அடி இன்னும் பலமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
April 21, 2024, 12:19 pm
இந்தியாவின் மசாலாவில் நச்சுப் பொருள்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை
April 21, 2024, 9:25 am